Rank

My Popularity (by popuri.us)

Vazhga Tamil

Friday, April 16, 2010

என் வைராக்கியம்


கரைகளே இல்லாத
ஆறுகளேது
குறைகளே இல்லாத
குடும்பங்களேது
ஏமாற்றம்
தீப்பெட்டி
அவமானங்கள்
தீக்குச்சிகள்
இவையிரெண்டும்
உரசிக்கொண்டபோதுதான்
பற்றிக்கொண்டு
சுட்டெனைத்தீண்டி
புடம்போட்டு புடம்போட்டு
எழுப்பியது தன்மானத்தீ
அதில்
வெந்துபோனது சோகம்
சிங்கத்தின் மீசையாய்
சிலிர்த்தெழுந்தது மனம்
கொடிய முற்கள்
நெடிய பயணம்
களைப்புமில்லை
பாதங்களில்
காயங்களுமில்லை
கண்ணில் படவில்லை
வருஷங்களும் வயதுகளும்
என்னை இறுகப்பற்றி
வழி நடத்துகிறது
வசந்தங்களை நோக்கி
என் வைராக்கியம்

No comments:

Post a Comment

accepted here