கரைகளே இல்லாத
ஆறுகளேது
குறைகளே இல்லாத
குடும்பங்களேது
ஏமாற்றம்
தீப்பெட்டி
அவமானங்கள்
தீக்குச்சிகள்
இவையிரெண்டும்
உரசிக்கொண்டபோதுதான்
பற்றிக்கொண்டு
சுட்டெனைத்தீண்டி
புடம்போட்டு புடம்போட்டு
எழுப்பியது தன்மானத்தீ
அதில்
வெந்துபோனது சோகம்
சிங்கத்தின் மீசையாய்
சிலிர்த்தெழுந்தது மனம்
கொடிய முற்கள்
நெடிய பயணம்
களைப்புமில்லை
பாதங்களில்
காயங்களுமில்லை
கண்ணில் படவில்லை
வருஷங்களும் வயதுகளும்
என்னை இறுகப்பற்றி
வழி நடத்துகிறது
வசந்தங்களை நோக்கி
என் வைராக்கியம்
Friday, April 16, 2010
என் வைராக்கியம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
accepted here