“என் நினைவுகள் உன் நினைவின்றி வேறல்ல
என் வழிகள் உன் வழியின்றி வேறல்ல”
துணைக்குத் தனிமை..
அசைபோட அவள் நினைவு..
எனது பேச்சு எப்போதும்
அவள் மௌனத்தைப் பற்றியதே..
“நான் உன்னை மறப்பதில்லை
என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்”
அர்த்தமற்ற சிரிப்புகளின் தொகுப்பாய்..
உளறல் வார்த்தைகளின் அர்த்தமாய்..
காகிதம் நிரப்பும் கவிதைகளின் காரணியாய்..
அவள்
ஏதுமின்றி நான்..
“நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை
உன்னைக் கைவிடுவதும் இல்லை”
என் கல்லறை வாசகமாய்
எழுதிவைத்திடுங்கள் அவள் பெயரை..
எனக்கான நல்ல விளக்கம்
வேறு இருக்க முடியாது
“அழிந்தவையாக புதைக்கப்படுவதெல்லாம்
அழியாதவையாய் எழுந்திரிக்கும்”
காதலும் கூட
புதைக்கப்படுவதில்லை..
விதைக்கப்படுகிறது
Saturday, July 31, 2010
நானும், இவளும், அவளும்... (கவிதை)
ஒவ்வொருமுறை கொசுவர்த்தி சுருளின்
சாம்பல் உதிர்ந்து விழும்பொழுதும்
சற்றே பிரகாசமாய்
இவள் முகம்
எங்களின் இன்பக் களியாட்டத் தருணங்களின்
பெருமூச்சுக் காற்றின் ஓசைக்கிடையே
எழும் பேச்செல்லாம்
அவளை பற்றியதாகவே இருக்கும்
அவளது அழகு..
அவளது பார்வை..
அவளது ஈர்ப்பு..
அவளது காதல்..
இப்படியாக..
அவளிடையே எனக்குள்ள காதலின் நெருக்கம்
இவளிடையே எனக்குள்ள இடைவெளியி்ல் விளக்கப்படும்
எங்களின் காதலின் ஆழம்
இவளின் ஆழத்தில் அறிவிக்கப்படும்
இப்படித்தான்
அவள் மீதுள்ள எனது காதல்
இவளுக்கு சொல்லப்பட்டது.. படுகிறது
சாம்பல் உதிர்ந்து விழும்பொழுதும்
சற்றே பிரகாசமாய்
இவள் முகம்
எங்களின் இன்பக் களியாட்டத் தருணங்களின்
பெருமூச்சுக் காற்றின் ஓசைக்கிடையே
எழும் பேச்செல்லாம்
அவளை பற்றியதாகவே இருக்கும்
அவளது அழகு..
அவளது பார்வை..
அவளது ஈர்ப்பு..
அவளது காதல்..
இப்படியாக..
அவளிடையே எனக்குள்ள காதலின் நெருக்கம்
இவளிடையே எனக்குள்ள இடைவெளியி்ல் விளக்கப்படும்
எங்களின் காதலின் ஆழம்
இவளின் ஆழத்தில் அறிவிக்கப்படும்
இப்படித்தான்
அவள் மீதுள்ள எனது காதல்
இவளுக்கு சொல்லப்பட்டது.. படுகிறது
Subscribe to:
Comments (Atom)
