போரில் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் துயரக் கதைகள்
வன்னியில் நடைபெற்ற போரில் உடல் உறுப்புகளை இழந்து, தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட தமிழர்களின் கண்ணீர் கதைகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட சி.என். என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.
வன்னியில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைகள் கண்ணீர் வெள்ளத்தையும், ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட பலர் புதிய சூழ்நிலைகளுடன் இணைந்து வாழமுடியாதவர்களாக உள்ளனர் என்றும் சி.என்.என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் கூறியுள்ளது.
இளைமைக்கால இளம் வயதினரைப்போல எதிர்கால வாழ்வின் கனவுகள், ரவீந்திரன் ஜனதாவுக்கு கிடையாது. 21 வயதான அவர் தனது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளாரா என்றால், “எதுவுமில்லை” என மென்மையாக பதில் தந்தார். தனக்கு எதிர்காலம் இல்லை என்பதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். ஏனெனில் கடந்த காலம் அவருக்கு தந்த அனுபவம் அது.
” என்னால் தற்போது எதுவுமே செய்யமுடியாது, அது தான் எனக்குள்ள பிரச்சனை எனக்கூறிய ஜனதாவின் மெல்லிய புன்னகை மெல்ல மறைந்து கண்களை கண்ணீர் நிறைத்துக்கொண்டது. அவரின் நம்பிக்கையான குரல் உடைந்து போனது.கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.
எனக்கு எல்லாவற்றிற்கும் உதவிகள் தேவை” என கண்ணீருக்கு மத்தியில் அவர் தெரிவித்தார்.
வன்னியில் நடைபெற்ற போரில் இறுதிப்பகுதியில் அங்கு வாழ்ந்த 280,000 மக்களில் ஜனதாவும் ஒருவர்.
சிறிலங்கா அரச படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அங்கு கடும் போர்நடைபெற்றிருந்தது.
இந்த மோதல்களில் இருந்து ஜனதா உயிர்தப்பியிருந்தார்.ஆனால் அவர் தனது இரு கால்களையும், ஒரு கண்ணையும் இழந்திருந்தார்.
” நாங்கள் பதுங்குகுழியினுள் பாதுகாப்பு தேடி ஓடினோம். ஆனால் எறிகணை ஒன்று பதுங்குழிக்குள் வீழந்து வெடித்தது.எனது உறவினர் கொல்லப்பட்டார்.நான் எனது இரு கால்களையும் இழந்தேன்” என தனது கதையை கூறும் போது இழந்துபோன தனது கண்ணை அவர் மறந்துவிட்டார்.
பின்னர் ஒரு நிமிட அமைதிக்குப் பின்னரே “எனது ஒரு கண்ணையும் நான் இழந்தேன்” என்று கூறினார் போரில் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் துயரக் கதைகள்: சி.என்.என் ஞாயிறு, 14 மார்ச் 2010( 17:06 ஐநப )
வன்னியில் நடைபெற்ற போரில் உடல் உறுப்புகளை இழந்து, தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட தமிழர்களின் கண்ணீர் கதைகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட சி.என். என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.
வன்னியில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைகள் கண்ணீர் வெள்ளத்தையும், ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட பலர் புதிய சூழ்நிலைகளுடன் இணைந்து வாழமுடியாதவர்களாக உள்ளனர் என்றும் சி.என்.என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் கூறியுள்ளது.
இளைமைக்கால இளம் வயதினரைப்போல எதிர்கால வாழ்வின் கனவுகள், ரவீந்திரன் ஜனதாவுக்கு கிடையாது. 21 வயதான அவர் தனது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளாரா என்றால், “எதுவுமில்லை” என மென்மையாக பதில் தந்தார். தனக்கு எதிர்காலம் இல்லை என்பதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். ஏனெனில் கடந்த காலம் அவருக்கு தந்த அனுபவம் அது.
” என்னால் தற்போது எதுவுமே செய்யமுடியாது, அது தான் எனக்குள்ள பிரச்சனை எனக்கூறிய ஜனதாவின் மெல்லிய புன்னகை மெல்ல மறைந்து கண்களை கண்ணீர் நிறைத்துக்கொண்டது. அவரின் நம்பிக்கையான குரல் உடைந்து போனது.கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.
எனக்கு எல்லாவற்றிற்கும் உதவிகள் தேவை” என கண்ணீருக்கு மத்தியில் அவர் தெரிவித்தார்.
வன்னியில் நடைபெற்ற போரில் இறுதிப்பகுதியில் அங்கு வாழ்ந்த 280,000 மக்களில் ஜனதாவும் ஒருவர்.
சிறிலங்கா அரச படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அங்கு கடும் போர்நடைபெற்றிருந்தது.
இந்த மோதல்களில் இருந்து ஜனதா உயிர்தப்பியிருந்தார்.ஆனால் அவர் தனது இரு கால்களையும், ஒரு கண்ணையும் இழந்திருந்தார்.
” நாங்கள் பதுங்குகுழியினுள் பாதுகாப்பு தேடி ஓடினோம். ஆனால் எறிகணை ஒன்று பதுங்குழிக்குள் வீழந்து வெடித்தது.எனது உறவினர் கொல்லப்பட்டார்.நான் எனது இரு கால்களையும் இழந்தேன்” என தனது கதையை கூறும் போது இழந்துபோன தனது கண்ணை அவர் மறந்துவிட்டார்.
பின்னர் ஒரு நிமிட அமைதிக்குப் பின்னரே “எனது ஒரு கண்ணையும் நான் இழந்தேன்” என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
accepted here