Rank

My Popularity (by popuri.us)

Vazhga Tamil

Friday, July 16, 2010

உண்மையின் தத்துவம் .............................

* பணமும், வசதி வாய்ப்புகளும் வந்து போகக்கூடியவை. மனித சமூகம் செல்வத்தை தேடி ஓடிக் கொண்டு இருக்கிறது. வாழ்க்கை பொருளுடையதாக இருக்கவேண்டுமானால், பொருள் தேடுவதோடு அருளையும் தேட வேண்டும்.


* சுயநலமற்ற சேவை மட்டுமே மனசாந்தியைத் தரவல்லது. நமக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை சேவை வெளிக்கொணர்ந்து விடும் ஆற்றல் கொண்டது.

* தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்குமானால், முதலில் தொண்டனாக சேவை செய்யும் அனுபவத்தைப் பெறவேண்டும்.

* எவன் ஒருவன் சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமமாக எண்ணுகிறானோ அவனே வாழ்வின் உண்மையை உணர்ந்தவன் ஆவான்.

* கடந்த காலம் திரும்புவதில்லை. வருங்காலம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. நிகழ்காலத்தை நல்ல முறையில் கழிப்பதே அறிவாளியின் செயல்.

* பிறக்கும்போது ஆபரணங்களுடன் பிறப்பதில்லை. ஆனால், முற்பிறவியில் செய்த செயல்களின் வினைப்பயனை அணிந்து கொண்டு வருகிறோம். யாராக இருந்தாலும் இதில் தப்ப முடியாது.

No comments:

Post a Comment

accepted here