Rank

My Popularity (by popuri.us)

Vazhga Tamil

Thursday, April 22, 2010

அம்மா

உன் இடுப்பில்
எனைச் சுமந்து நிலாச்சோறு
ஊட்டிய நாட்களில் உன்
பொறுமையின் வலி நான்
உணரவில்லை...

தாவணிப் பருவத்தில் தோழி
வீடுசென்று தாமதமாக திரும்பிய
நாட்களில் உன் அவஸ்தையின் வலி
நான் உணரவில்லை...

கல்லூரிப் பருவத்தில் கண்ணாடியுடன்
சினேகித்து பட்டாம்பூச்சியாய்
பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி
நான் உணரவில்லை...

மணப்பந்தலில் உன் காலில்
விழுந்தெழுந்த போது என்
உச்சி முகர்ந்த உனது
முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை!

No comments:

Post a Comment

accepted here