சில தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகளின் பேச்சுக்களில் விழுந்த நகைச்சுவை சிதறல்கள் உங்களுக்காக.
இதுதான் மிரட்டல்
என்னோட அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்ப மிரட்டினாங்க. அதனாலதான் நான் ரமேஷ மறந்துட்டு அவங்க சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சம்மதிச்சேன்.
அப்படி என்னதாண்டி மிரட்டினாங்க?
தொடர்ந்து ரமேஷ் கூட பழகினா அப்புறம் அவனையே கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்னு மிரட்டினாங்க.
எளிமையான நிகழ்ச்சி
சம்மந்திகிட்ட நிச்சயதார்த்தத்தை எளிமையா செய்யணும்னு சொன்னது தப்பா போச்சு!
ஏன்?
தட்டு மாத்திணதும், எல்லோரும் அவங்கவங்க இஷ்டப்படி அவங்கவங்க வீட்ல போய் சாப்பிட்டுக்கலாம்னு சொல்லிட்டாரு.
நல்ல மனைவி
இப்படி உடம்பு முடியாம இருக்கும்போது, நகைகளை நிறைய போட்டிருக்கிற மாதிரி உன்ன படம் வரைஞ்சு பெரிசா மாட்டி வைக்கச் சொல்றியே, ஏன்?
எப்படியும் நான் செத்தப்பிறகு என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார். அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்கன்னு என் வீட்டுக்கார இம்ச பண்ணுவால்ல! அதுக்குத்தான்!!
என்னடா அவன் திருமணத்திற்கு அவசரப் படாதே அவசரப் படாதேன்னு சொல்லிக்கிட்டே இருக்கான்.
அப்படி என்னதான்டா சொல்றான்.
அவசரப்பட்டு திருமணம் செஞ்சிக்கிட்டா, ஏன்டா செஞ்சோம்னு நிதானமாக யோசிக்க வேண்டி வருமாம்.
***
யாரும் இருக்க மாட்டார்கள்
காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.
காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.
காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.
***
விளம்பரம்
கணவன் தேவை என விளம்பரம் கொடுத்தாள் ஒரு பெண்.
"என் கணவனை எடுத்துக் கொள்" என நூறு கடிதம் வந்தது.
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..
கணவன் : ?!?!?!
காதலர்கள் கடற்கரையில்..
காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .
காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . . .
ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
accepted here