கண்கள் மூடி
கனவுகள் தேடி
வளையல் குலுங்க
இடையினை வளைத்து
உதட்டின் பிளவில்
உயிரினை உறிஞ்சி
அவள் விரல்நகங்கள்
முதுகினில் வரய
மார்புகள் உரச
மயக்கம் கொண்டு
இளமை வேகத்தில்
இல்லற சுகத்தில்
காமம் மிகுந்து
காதல் அதுவென்றேன்...!
பின்...
வயதுகள் ஏறி
பிணிகள் கண்டு
தசைகள் சுருங்கி
கூடுகள் தெரிய
புழுக்கள் தின்ன
நாற்றம் மிகுந்து
ஆறடி தூரத்தில்
அருமை சொந்தம்
போகிற போக்கில்
நாலொரு வார்த்தை
அப்போதும் அருகில்
நெஞ்சினை தடவி
வழியும் எச்சிலை
வலியுடன் துடைத்து
உயிரின் சுவாசம்
உடையும் போது
பொங்கும் அவள்விழி
பூக்கும் கண்ணீரில்
கண்டு கொண்டேன்
காதல் அதுவென்று...!
அன்புடன்
பரமேஸ்வரி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
accepted here